ADDED : டிச 04, 2010 01:12 AM

* கடமையைக் கருத்துடன் செய்வது மனிதரின் பொறுப்பு. பலனை வழங்குவது ஆண்டவனின் பொறுப்பு.
* நமக்கு கிடைத்ததை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும். கிடைத்ததை பிறருக்கு வழங்குங்கள். கிடைக்காவிட்டால்,
உங்களையே வழங்குவதே தியாக உணர்வாகும்.
* மேலோட்டமான மற்றும் பயன்தராத புத்தக அறிவை விட, எதையும் அனுபவம் மூலமாகச் சோதித்து
உணருங்கள். ஆழ்ந்த பயன் தரக்கூடிய அறிவைத் தேடுவதுடன், அதன்மூலம் புத்தியை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
* கோபம் ஏற்படும் போது எந்தச் செயலையும் செய்யக்கூடாது. கோபம், பதட்டம், வேகம் இவை மூன்றும்
சேர்ந்தால் குழப்பம் தான் ஏற்படும். விவேகம் இல்லாமல் கவலையே மிஞ்சும்.
* பிரிப்பதும், பிரித்தாள்வதும் அரசியலுக்கு ஏற்றதாக இருந்தாலும், மனித வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும்
உதவாது. மனிதனிடம் உள்ள தெய்வீகம் ஒற்றுமையில் வெளிப்படும். மனித சக்தி ஒற்றுமையில் தெய்வீகச்
சக்தியாகிறது. பிரிவினையில் மிருக சக்தியாகிறது.
- சாய்பாபா
* நமக்கு கிடைத்ததை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும். கிடைத்ததை பிறருக்கு வழங்குங்கள். கிடைக்காவிட்டால்,
உங்களையே வழங்குவதே தியாக உணர்வாகும்.
* மேலோட்டமான மற்றும் பயன்தராத புத்தக அறிவை விட, எதையும் அனுபவம் மூலமாகச் சோதித்து
உணருங்கள். ஆழ்ந்த பயன் தரக்கூடிய அறிவைத் தேடுவதுடன், அதன்மூலம் புத்தியை வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
* கோபம் ஏற்படும் போது எந்தச் செயலையும் செய்யக்கூடாது. கோபம், பதட்டம், வேகம் இவை மூன்றும்
சேர்ந்தால் குழப்பம் தான் ஏற்படும். விவேகம் இல்லாமல் கவலையே மிஞ்சும்.
* பிரிப்பதும், பிரித்தாள்வதும் அரசியலுக்கு ஏற்றதாக இருந்தாலும், மனித வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும்
உதவாது. மனிதனிடம் உள்ள தெய்வீகம் ஒற்றுமையில் வெளிப்படும். மனித சக்தி ஒற்றுமையில் தெய்வீகச்
சக்தியாகிறது. பிரிவினையில் மிருக சக்தியாகிறது.
- சாய்பாபா